கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு

36 மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒருநாள் கல்வி சுற்றுலாவாக போத்தனூர் மகாத்மா காந்தி அருங்காட்சியகம், பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காசியகம் மற்றும் பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சுற்றுலா வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த சுற்றுலாவுக்காக ரூ.10,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...