கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு

36 மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒருநாள் கல்வி சுற்றுலாவாக போத்தனூர் மகாத்மா காந்தி அருங்காட்சியகம், பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காசியகம் மற்றும் பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சுற்றுலா வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த சுற்றுலாவுக்காக ரூ.10,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...