ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தி மார்க். கம்யூ. கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்..!

கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில், ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கோவை மக்களவை உறுப்பினர் P.R.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,

1) நீர்வழி மற்றும் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு மனித இழப்புகளுக்கு காரணமாக உள்ள ஈஷா நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டும்.

2) மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, GST மற்றும் மூலப்பொருள் விலையேற்றத்தால் பஞ்சாலை போன்ற சிறு தொழில்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

3) கோவைக்கு தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு, தென் தமிழக பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

4) கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அதனை உடனடியாக நடை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் கோவிலை புறந்தள்ளி, ஈஷா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

6) வரும் பிப்ரவரி 3ஆவது வாரத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

7) மத்திய அரசின் திட்டங்களை கோவை மக்களவை உறுப்பினர் தடுப்பதாக பொய் செய்தி பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டிக்கும் விதமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...