கோவை சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநில இளைஞரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 6.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரும் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் கண்ணம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் சிங் (32) என்பவரது அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அங்கு அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநில இளைஞர் மனோஜ் குமார் சிங்கிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...