கோவை சூலூரில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிசா மாநில இளைஞரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், 6.5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரும் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் கண்ணம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் சிங் (32) என்பவரது அறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அங்கு அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒடிசா மாநில இளைஞர் மனோஜ் குமார் சிங்கிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...