கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை..!

கோவை பொள்ளாச்சி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற பால்பாண்டி என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து, நீதிமன்றம் உத்தரவு.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த திவான் புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தில் மலையாண்டி பட்டணத்தில் இருந்து கோட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வாகன தணிக்கையில் இருந்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் பால்பாண்டியை பிடித்து சோதனை செய்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோட்டூர் அருகே புளியமரத்தடியில் சுமார் 1.3 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர், பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை மலிவு விலையில் வாங்கி, அதை அதிக லாபத்தில் கேரளாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து பால்பாண்டி குற்றவாளி என நீதிபதி சரவணபாபு அறிவித்தார்.

தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற குற்றத்திற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதங்கள் சிறை தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...