கோவையில் அரசு பேருந்து மோதி பலியான தூய்மை பணியாளர்கள் - ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் சமூக நீதிக்கட்சி மனு

கோவையில் இன்று காலை அரசு பேருந்து மோதி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சமூக நீதி கட்சி சார்பில் மனு.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - தேவி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் கோவை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பணிக்காக சைக்கிளில் சென்ற போது, அரசு பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



இதனிடையே உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி சமூக நீதி கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மேலும் தூய்மை பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 7 மணியாக மாற்றிட வேண்டும். இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களின் நேரம் குறித்து சமூக நீதி கட்சியின் சார்பில் பலமுறை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...