திருப்பூர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான முதல் கட்ட நேர்முக தேர்வு

பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான முதல் கட்டமாக 60 பேருக்கான நேர்முக தேர்வை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் உள்ளிட்டோர் நடத்தினர்.



திருப்பூர்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.



இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேர்முக தேர்வும் நடைபெற்றது.



இதில், 306 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக 60 பேருக்கு தேர்வு நடைபெற்றது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வை நடத்தினர்

இந்த நேர்முக தேர்வானது வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...