போதையில்லா மாவட்டமாக மாற்றப்படும்..! - நீலகிரி புதிய எஸ்பி பிரபாகர் உறுதி

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஸ் ராவத், சமீபத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டார். அவருக்கு பதிலாக சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரபாகர் நியமிக்கபட்டார்.



இதையடுத்து இன்று ஊட்டி வந்த பிரபாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து மாவோயிஸ்ட் அமைப்பினர், நீலகிரி மாவட்டத்திற்குள் வராமல் தடுக்கப்படும் என்றும், ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போதையில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.



இவர் 2005 -ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி- ஆக ஆக பணியில் சேர்ந்தார் பிரபாகர். பின்னர் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தமிழக அதிரடி படையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அவர், இறுதியாக சென்னை மெட்ரோ தலைமைபாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...