வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: திருப்பூரில் அதிவேகமாக பைக்கில் ஊர்வலம் சென்ற இளைஞர்கள் - போலீசாருடன் வாக்குவாதம்

திருப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்திய இளைஞர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள மன்னரைப் பகுதியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊத்துக்குளி சாலையில் இருசக்கர வாகனத்தில் கூச்சலிட்டபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.



அப்போது, கருமாரம்பாளையம் அருகே வந்த போது, வாகனங்கள் விபத்துக்குள்ளானது.



அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சட்டம் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.



அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞர்களின் செயல், பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பபை ஏற்படுத்தியது.

Newsletter

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...