கோவை பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - விவசாயிகள் அச்சம்

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தோட்டத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து யானைகள் உலா வருவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவததை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் தினமும் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



நேற்று இரவு, பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வருவதை அவர்கள் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...