கோவை பன்னிமடை அருகே தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் - விவசாயிகள் அச்சம்

கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் புகுந்தது. தோட்டத்தில் இருந்த அவரது வீட்டில் இருந்து யானைகள் உலா வருவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவததை யானைகள் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை அங்குள்ள தோட்டங்களில் தினமும் இரவில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



நேற்று இரவு, பன்னிமடையை அடுத்த தாளியூர் புறா தோட்டம் ராஜகோபால் என்பவரது தோட்டத்தில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது. தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வருவதை அவர்கள் வீடியோ எடுத்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...