முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவு: கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை

கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய, ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.


கோவை: முன்னாள் போப், 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி அவரது ஆன்மா சாந்தியடைய, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக தனது ஓய்வு காலத்தை வாடிகனில் கழித்து வந்த நிலையில், உடல் மூப்பு காரணமாக தனது 95 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, கோவை ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம் சார்பாக, கோவை ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த முன்னாள் போப் ஆண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.



ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பால் ஆலப்பாட், மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் எட்டு ஆண்டு காலமே பதவியில் இருந்த போதும், கத்தோலிக்க சபையின் வளர்ச்சியிலும், திருச்சபையின் விசுவாசிகளுக்கு இறையியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.



சிறந்த இறை நேசராக விளங்கிய அவரது அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில், மறை மாவட்டத்தில் உள்ள அருட் தந்தையர்கள், மத போதகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்றார்.

ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் 2005 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார். அவர், 1977 முதல் 1982 ஆம் ஆண்டு வரை முனிச்சின் பேராயராக இருந்தபோது முறைகேடு வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள் புரிந்ததாக புகார் எழுந்த நிலையில், அதை ஏற்றுக்கொண்டு அவர் பதவி ஏற்று 8 ஆண்டுகளிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்படி, 1415 ஆம் ஆண்டில் கிரிகோரிக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்த முதல் போப், பெனடிக்ட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...