முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30 காட்டுப் பன்றிகள் பலி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வேகமாக பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி இறந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த தொற்று முதுமலை புலிகள் காப்பகத்திலும் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.



கடந்த 2 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. அவற்றின் உடல்களை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து எரித்து வருகின்றனர்.



குறிப்பாக இன்று மட்டும் 4 பன்றிகளின் உடல்களை கைப்பற்றி அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கபட்டு ரசாயன பரிசோதனைகாக அனுப்பி வைக்கபட்டுள்ளன.



இதனால் புலிகள் காப்பக வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது இறந்துள்ள பன்றிகள் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு தினந்தோறும் வந்து உணவு சாப்பிட்டு செல்பவை என்பதால் வளர்ப்பு யானைகளுக்கு பரவி விடாமல் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.



குடியிருப்பு பகுதிகள், யானை முகாம் பகுதிகளுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க சுற்றி சேலைகள் கட்டபட்டுள்ளன.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...