கோவையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் - வீடியோ வைரல்

கோவையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளுக்கு ஊர்வலமாக சென்ற இரண்டு அமைப்பை சேர்ந்தவர்கள், சாலையில் தாறுமாறாக வாகன ஓட்டிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.



கோவை: விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதில் ஒரு பகுதியாக, கோவை ஈச்சனாரியில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தமிழ்நாடு நாயக்கர் முன்னேற்ற கழகம், அகில பாரத யாதவ மகா சபாவை சேர்ந்த நிர்வாகிகள், 200 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்றனர்.



அப்போது, கோவை பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே செல்லும்போது, சத்தமாக கத்தியபடியும், வாகனங்களை தாறுமாறாக ஓட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியபடி சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...