அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கிய சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

ஐ.பி.டி.எஸ் என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கியுள்ள லயோலா கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கோவை பிரஸ் கிளப்பில் அந்த நிறுவனத்தின் இணையதளத்தை அறிமுகம் செய்தனர்.



கோவை: சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், ஐ.பி.டி.எஸ்., என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.



இந்த நிறுவனத்தின் இணையதள அறிமுக நிகழ்ச்சி, இன்றைய தினம் கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.



இதில் ஐ.பி.டி.எஸ். நிறுவனர் திருநாவுக்கரசு கூறியதாவது, லயோலா கல்லூரியில் 2002ம் ஆண்டு பண்பாட்டு மக்கள் தொடர்பு மையம் துவக்கப்பட்டு, தேர்தல் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதுவரை 31 கணிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

2004 லோக்சபா தேர்தல் முதல், கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என கணித்தோம். தற்போது நாங்கள், இண்டியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜி (ஐ.பி.டி.எஸ்.,) என்ற அரசியல் ஆலோசனை அமைப்பைத் துவக்கியுள்ளோம்.



இதன் இணையதளத்தை http://ipds.com.in/ கோவையில் அறிமுகம் செய்கிறோம். இந்த இணையதளத்தில் எங்களது முந்தைய செயல்பாடுகள், அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனை, உத்திகளை வகுத்துக் கொடுக்க உள்ளோம். இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் 3 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...