போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் - தந்தை, மகன் கைது

கோவையில் போக்ஸோ வழக்கில் சாட்சியளித்த சிறுமியின் பெற்றோரை தாக்கிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கரடிமடையை சேர்ந்த 20 வயது இளைஞர் ராகவேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள போக்ஸோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ராகவேந்திரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறுமியின் பெற்றோர் ராகவேந்திரனுக்கு எதிராக சாட்சியளித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரன் மற்றும் அவரது தந்தை ரங்கராஜன் சிறுமியின் வீட்டுற்கு சென்று அவரது பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையேடுத்து, ராகவேந்திரன், அவரது தந்தை ரங்கராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...