கோவையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை: திருவள்ளூர் மாவட்டம் ருக்மணி நகரை சேர்ந்தவர் தரணி. கடந்த 30 ஆம் தேதி கோவை வந்த அவர், ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். கோவைக்கு தொழில் சார்ந்து பல்வேறு பொருட்களை வாங்க வந்ததாக கூறியிருந்த தரணி, நேற்று விடுதியில் இருந்து நீண்ட நேரம் வெளியே வரவில்லை.
சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கதவை தட்டிய போதும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தரணி சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கதவை தட்டிய போதும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தரணி சடலமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.