பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

பல்லடம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை, சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடை உள்ளது.

இந்த கடை முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு விஜயன் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது.



அதிர்ச்சி அடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.



இதுகுறித்து விஜயன் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் மர்மநபரை தேடி வருகின்றனர். தற்போது இந்த திருட்டு சிசிடிவி காட்சிகள், சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பட்ட பகலில் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...