வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 பிறந்தநாளையொட்டி, கோவை ஈச்சனாரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263 பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில் சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன.

இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு பகுதி கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...