கோவை: சரவணம்பட்டி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி மனைவி பழனியம்மாள் (74). இவர் நேற்று வீட்டின் அருகே மாவு அரைப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
மாவு அரைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளார். சரவணம்பட்டி பிள்ளையார் கோயில் வீதி எதிரே வந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பழனியம்மாளின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.