கோவை விழா: கோவையில் நடைபெற்ற இசையுடன் கூடிய கண்கவர் லேசர் ஷோ நிகழ்ச்சி

இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



கோவை: ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் கோவை விழா, வரும் 4-8 ஆம் தேதி முதல் கொண்டாப்படவுள்ளது.



இவ்வாண்டு, 15 வது கோவை விழாவை முன்னிட்டு இன்று இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.



கடந்த நவம்பர் 24ஆம் தேதி கோவை விழாவை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த வருடம் 15 வது கோவை விழாவை முன்னிட்டு, 15 சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், மாரத்தான், அறிவியல் விழாக்கள், ஹேக்கத்தான்கள், இசை நிகழ்ச்சிகள், கலை அமர்வுகள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.



நாளை மறு நாள் நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில், இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்வில், பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் நடைபெறும் திருவிழா போலவே, மாநகர் பகுதிகளில் கோவை விழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

அனைத்து கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை விழாவில் இடம் பெற உள்ளதாகவும், அதில் குறிப்பாக கார் கண்காட்சி, விவசாய கண்காட்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



பின்னர் நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியில் கண்கவர் வண்ண லேசர் விளக்குகள் இசைக்கேற்றவாறு பிரதிபலித்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கோவை விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ட்ரீட் ஆர்ட் நிகழ்ச்சியில், 70 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் நிகழ்ச்சி பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக இருக்கும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அக்ரி நெக்ஸ்ட், கார் பேரணி, செஃப்ஸ் பிளேட், தி பிட்ச், பாரா ஸ்போர்ட்ஸ் மற்றும் இசை மழை ஆகியவை இந்த வருடம் திட்டமிடப்பட்ட மற்ற நிகழ்வுகள் ஆகும்.





Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...