கோவையில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்


கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டு தரக்கோரி இன்று கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் அ.தி.மு.க வினர் புகார் மனு அளித்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அ.தி.மு.க கட்சியில் மாநகராட்சி 52-வது பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காணாமல் போன 8 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை மீட்டுத் தரக்கோரி, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் மனு அளித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களில் கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியை தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த ஒரு வார காலமாக காணவில்லை எனவும், சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களது தொலைபேசி எண்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்தார்.

இதனால் நலத்திட்டப்பணிகள் முடங்கி இருப்பதாகவும், காணாமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராக இருப்பதாகவும், அ.தி.மு.க தொண்டர்களின் முழு ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...