கோவையில் மழை நீரை சேகரிக்க ரூ.2 கோடி மதிப்பில் இன்பில்ட்ரேஷன் கேலரி - மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை சேகரிக்க 25 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இன்பில்ட்ரேஷன் கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை மாநகராட்சியில் மழை நீரை சேகரிக்கும் நோக்கில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தொட்டி மற்றும் இன்பில்ட்ரேஷன் கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ பந்தய சாலை பகுதியில்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக, பந்தய சாலை பகுதியில்‌ பெய்யும்‌ மழைநீரை இப்பகுதியிலேயே சேகரிக்க ஏதுவாக ஜெர்மன்‌ தொழில் நுட்பத்தில்‌ சுமார்‌ 1 கிலோ மீட்டர்‌ நீளத்தில்‌ மழைநீர்‌ உட்புகும்‌ நாளங்கள்‌ கொண்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



மேலும்‌, 25 இடங்களில்‌ சாலைகளில்‌ ஓடும்‌ மழைநீரை சேகரிக்கும்‌ வண்ணம்‌ இன்பில்டரேசன்‌ கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில்‌ சுமார்‌ ஒரு லட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மழைநீர்‌ சேகரிப்பு தொட்டி ஜெர்மன்‌ தொழில்‌ நுட்பத்தின்‌ மூலம்‌ பந்தய சாலை, சாவித்திரி சண்முகம்‌ சாலை சந்திப்பாகிய ஸ்டேன்ஸ்‌ சந்திப்பு பகுதியில்‌ தற்போது மாநகராட்சியால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்‌, இவ்வாறு அமைக்கப்பட்டுவரும்‌ மழைநீர்‌ சேகரிப்பு தொட்டியின்‌ மேற்புறத்தில்‌ பசுமை புல்வெளிகள்‌ கொண்ட தீவுத்திடல்‌ அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள்‌ ரூ.2 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...