பல்லடம் அரசு மருத்துவமனை வாயிலில் உள்ள கான்கிரீட் மேட்டின் மீது ஏற முடியாமல் திணறிய கலெக்டர் கார் - இனியாவது சரி செய்வார்களா..? மக்கள் கேள்வி

பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள கான்கிரீட் மேட்டின் மீது ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்த நிலையில் இன்று கலெக்டர் வாகனமும் ஏற முடியாமல் திணறியது குறிப்பிடத்தக்கது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பூங்கா மற்றும் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள காத்திருப்போர் அறை ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

நகராட்சி பூங்கா திறப்பு விழா முடிந்த பின்னர், அமைச்சர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அணிவகுத்தன. அப்போது, முன்னால் சென்ற தாசில்தார், நகராட்சி கமிஷனர் மற்றும் பொறியாளர் உள்ளிட்டோரின் வாகனங்கள் அரசு மருத்துவமனை பிரதான நுழைவாயில் வழியாக சென்றன.

தொடர்ந்து வந்த ஆட்சியரின் கார் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சிலாப் மீது ஏற முடியாமல் ரிவர்ஸ் சென்றது.



இதையடுத்து, ரோட்டிலேயே இறங்கிய ஆட்சியர் வினீத், அரசு மருத்துவமனைக்குக்குள் நடந்து சென்றார். அவரது காரை தொடர்ந்து வந்த அமைச்சர் மற்றும் பாதுகாப்பு போலீசாரின் வாகனங்கள் மாற்று வழித்தடம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டன.



அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சிமெண்ட் சிலாபுக்கும் ரோட்டுக்கும் இடையே ஏறத்தாழ ஒன்றை அடி உயரம் வித்தியாசம் உள்ளதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், வயதான நோயாளிகள் மருத்துவமனைக்குள் செல்ல தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சில, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் நோயாளிகள், பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யார் இதை சரி செய்ய வேண்டும் - நெடுஞ்சாலை துறையா? அல்லது நகராட்சியா.? என்பதில் நீயா நானா போட்டி ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள பிரச்சனையில் இன்று ஆட்சியரின் வாகனமும் தடுமாறியுள்ளதால், இனியாவது அந்த மேடு சரி செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...