புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

2022 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளை திருப்பூர் மாநகர காவல்துறையினர் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



மேலும், குண்டர் தடுப்புச் சட்டம், கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழிப்பறி வழக்குகள், கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, லாட்டரி விற்பனை சூதாட்டம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு என அனைத்து வழக்குகளையும், திருப்பூர் மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் பெருமிதம் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு இரவில் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை மூலமாக அதிவேக பயணம் குறைந்து புத்தாண்டு போன்ற நன்னாளில் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...