புத்தாண்டு கொண்டாட்டம்: இரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை - திருப்பூர் மாநகர காவல் ஆணையர்

2022 ஆம் ஆண்டில் கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளை திருப்பூர் மாநகர காவல்துறையினர் சிறப்பாக கையாண்டுள்ளனர் என்று திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



மேலும், குண்டர் தடுப்புச் சட்டம், கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் கூட்டுக் கொள்ளை வழிப்பறி வழக்குகள், கஞ்சா விற்பனை குட்கா விற்பனை, லாட்டரி விற்பனை சூதாட்டம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு என அனைத்து வழக்குகளையும், திருப்பூர் மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் பெருமிதம் தெரிவித்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு இரவில் வாகனங்களை அதிவேகமாக இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த நடவடிக்கை மூலமாக அதிவேக பயணம் குறைந்து புத்தாண்டு போன்ற நன்னாளில் விபத்துக்களும் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...