வரும் பொங்கலுக்குள் 4 வது குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து விடும் - திருப்பூர் மேயர்

நான்காவது குடிநீர் திட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாமன்ற கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.



இதில், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், படிப்படியாக திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் மார்ச் மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பாகுபாடு இல்லாமல் அடிப்படை பிரச்சினைகள் மேம்படுத்தி தரப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...