நான்காவது குடிநீர் திட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாமன்ற கூட்டத்தில் மேயர் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், படிப்படியாக திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் மார்ச் மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பாகுபாடு இல்லாமல் அடிப்படை பிரச்சினைகள் மேம்படுத்தி தரப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.
இதில், துணை மேயர், மாநகராட்சி ஆணையாளர், மண்டல உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே நான்காவது குடிநீர் திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், படிப்படியாக திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் மார்ச் மாதத்திற்குள் சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பாகுபாடு இல்லாமல் அடிப்படை பிரச்சினைகள் மேம்படுத்தி தரப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.