பிரதமர் மோடியின் தாயார் மறைவு: கோவை பாஜகவினர் தீபங்கள் ஏற்றி அஞ்சலி..!

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று உடல்நலம் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜகவின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.



இதில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பாஜகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



இந்த அஞ்சலி நிகழ்விற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி பிரதமர் மோடியின் தாயார் படத்தை ஓவியமாக வரைந்திருந்தார்.



அந்த ஓவியத்தை சுற்றிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் தாயார் 100வது வயதில் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு, பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரதமரின் தாயார் கடுமையான வாழ்க்கை பின்னணிகளை சந்தித்து, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உன்னத தலைவரை நாட்டிற்காக கொடுத்து மிகப்பெரிய உத்வேகத்தை அவருக்கு அளித்து தவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக, தெரிவித்தார்.

மேலும், இந்திய பெண்கள் அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு, இவரது வாழ்க்கை உத்வேகமாக உள்ளது எனவும் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மூலமாக உயர்ந்த தலைவர்களை தவப்புதல்வர்களை கொடுக்க முடியும் என்பதற்கான உதாரணமாக இவரது வாழ்க்கையை பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், இரங்கல் தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சமூக தலைவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.



சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி சங்கர் என்பவர் வரைந்த பிரதமரின் தாயார் ஓவியம் குறித்து பேசிய அவர், தெற்கு தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக அணுகிய பொழுது அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன், பிரதமரின் தாயார் ஓவியத்தை வரைந்த அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...