உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் பிரதமரின் தாயார்- வானதி சீனிவாசன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.

அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...