உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் பிரதமரின் தாயார்- வானதி சீனிவாசன் இரங்கல்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


கோவை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

"நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தாயார் இன்று காலை இறைவன் திருவடி சேர்ந்தார். உலகம் போற்றும் ஓர் உன்னத தேசத் தலைவனை நமக்கு தந்தவர் சுயநலமற்ற தூய்மையான எளிமையான வாழ்க்கையை கடைபிடித்து நமக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் தியாகத்திலும் தேசப்பற்றிலும் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கும் அவரது வாழ்க்கை இந்திய பெண்களுக்கு உதாரணமானது.

அவரது மறைவிற்கு பாஜக மகளிர் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதைக்குரிய நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மன ஆறுதலை அளிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...