கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர் சமீரன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் சமீரன், 893 சுய உதவி குழுக்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


கோவை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.



மேலும் அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை விருதுகள் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 893 சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.



இந்நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சுய வேலைவாய்ப்பு திட்டம், சமுதாயத்திறன் பள்ளிகள் அமைப்பதற்கு நிதி, சமுதாயப் பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 893 சுய உதவி குழுக்களுக்கு 58.004 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 2704 பயனாளிகள் பயன் பெற்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...