கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர் சமீரன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் சமீரன், 893 சுய உதவி குழுக்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


கோவை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.



மேலும் அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை விருதுகள் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 893 சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.



இந்நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சுய வேலைவாய்ப்பு திட்டம், சமுதாயத்திறன் பள்ளிகள் அமைப்பதற்கு நிதி, சமுதாயப் பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 893 சுய உதவி குழுக்களுக்கு 58.004 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 2704 பயனாளிகள் பயன் பெற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...