நீலகிரி உதகை அருகே வயதான தம்பதிக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு..!

உதகையில் வயதான தம்பதிக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் இருந்த தேயிலை செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி ஆக்கிரமிக்க முயன்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மணிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (71). இவர் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் தனது மனைவி பிரேமாவுடன் மணிக்கல் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தில் உள்ள தேயிலை எஸ்டேட் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுலாத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்த புத்திசந்திரன், ராஜுவிடம் உள்ள 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டுள்ளார்.

இந்நிலையில், குறைந்த விலைக்கு கேட்பதாக கூறி ராஜு விற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ராஜூவை முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மிரட்டியதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜுவின் நிலத்தில் இருந்த 300-க்கும் மேற்பட்ட தேயிலை செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி ஆக்கிரமிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜு உடனடியாக மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட மஞ்சூர் காவல் துறையினர் ராஜூ மற்றும் புத்திசந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து, தற்போது அத்துமீறி ராஜூவின் தோட்டத்திற்குள் நுழைதல், நிலத்தை சேதப்படுத்துதல், அச்சுறுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புத்திசந்திரன் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உதகை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...