நீலகிரி கூடலூரில் கேஸ் சிலிண்டர் லாரியின் டயர் வெடித்து தீ பற்றியதால் பரபரப்பு - தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

கூடலூர் நகரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்த விபத்தில், லாரியில் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்ப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேஸ் விநியோகம் செய்வதற்காக இன்று காலை ஒரு லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.



இந்நிலையில் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கூடலூர் நகரில் ராஜகோபாலபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயரில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக லாரியின் பின்பக்க டயரில் பற்றிய தீயை தண்ணீரை பீச்சி அடித்து உடனடியாக அணைத்தனர்.



மேலும் லாரியில் இருந்த சிலிண்டர்களின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். ஓட்டுனரின் சாதுர்யமான செயலாலும், விரைந்து வந்த தீயணைப்பு துறையினராலும் கூடலூரில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...