நீலகிரி கூடலூரில் கேஸ் சிலிண்டர் லாரியின் டயர் வெடித்து தீ பற்றியதால் பரபரப்பு - தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

கூடலூர் நகரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்த விபத்தில், லாரியில் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்ப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேஸ் விநியோகம் செய்வதற்காக இன்று காலை ஒரு லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.



இந்நிலையில் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கூடலூர் நகரில் ராஜகோபாலபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயரில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக லாரியின் பின்பக்க டயரில் பற்றிய தீயை தண்ணீரை பீச்சி அடித்து உடனடியாக அணைத்தனர்.



மேலும் லாரியில் இருந்த சிலிண்டர்களின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். ஓட்டுனரின் சாதுர்யமான செயலாலும், விரைந்து வந்த தீயணைப்பு துறையினராலும் கூடலூரில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...