கோவை சூலூர் அருகே நேரத்திற்கு சரியாக இயக்கப்படாத அரசு பேருந்து - பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயக்கப்படாமல் இருப்பதை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்துள்ளது காடுவெட்டி பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள நல்லகவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த பேருந்தானது, சரியான நேரத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக கிராம பொதுமக்கள், மாணவ - மாணவிகள், குறித்த நேரத்தில் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த சுழலில், நல்ல கவுண்டன்பாளையம் கிராமத்திற்கு வந்த 6ஆம் நம்பர் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தை சரியான நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...