கோவை சூலூர் அருகே நேரத்திற்கு சரியாக இயக்கப்படாத அரசு பேருந்து - பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயக்கப்படாமல் இருப்பதை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்துள்ளது காடுவெட்டி பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள நல்லகவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த பேருந்தானது, சரியான நேரத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக கிராம பொதுமக்கள், மாணவ - மாணவிகள், குறித்த நேரத்தில் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இந்த சுழலில், நல்ல கவுண்டன்பாளையம் கிராமத்திற்கு வந்த 6ஆம் நம்பர் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தை சரியான நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...