உதகை அருகே காட்டு யானை தாக்கியதில் குரும்பர் இன ஆதிவாசி ஒருவர் பலியான சோகம்

உதகை அருகேயுள்ள மாவனல்லா கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஆதிவாசி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தை சேர்ந்தவர் மாதன் (55). குரும்பர் இன ஆதிவாசியான இவர், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மசினகுடிக்கு சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு மாவனல்லாவில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை ஒன்று மாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. மாதனின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, யானை தாக்கியதில் மாதன் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.



உடனடியாக அவரை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாதனின் உடல் பிரேத பரிசோதனைகாக உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

மாவனல்லா பகுதியில் சுற்றித் திரியும் இந்த ஒற்றை காட்டு யானை ஏற்கனவே இரண்டு பேரை தாக்கி கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...