கோவையில் மோப்ப நாய்களுக்கு 6 மாத கால சிறப்பு பயிற்சி - நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது..!

வெடிகுண்டு மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் 6 மாதம் பயிற்சி முடித்த நிலா, டயானா, ஸ்டெஃபி என்ற மூன்று மோப்ப நாய்களும், காவல் ஆணையாளரின் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.



கோவை: தமிழ்நாடு காவல்துறை பிரிவில் மோப்ப நாய்களின் பங்கு அளப்பறியது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக குற்ற பின்னணியில் உள்ள நபர்களை கைது செய்ய சின்ன தடயம் கிடைத்தாலும், மோப்ப நாய்களை கொண்டு எளிதில் அவர்களை கண்டுபிடிக்கலாம்.

அதுமட்டுமின்றி வெடிகுண்டு கண்டறிதல், கஞ்சா போன்ற போதை பொருட்களை கண்டறிதல், குற்றவாளிகளை பின் தொடர என மோப்ப நாய்கள் போலீசாருக்கு பெருமளவில் உறுதுணையாக இருந்து வருகிறது.

அவ்வாறான மோப்ப நாய்கள் முறையான பயிற்சி மூலம் செயல்முறைக்காக தயார்படுத்தப்படுகின்றன. இதற்காக, கோவையில் போலீஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தனிப்பிரிவு செயல்படுகிறது.

அந்த வகையில், கோவையில் 6 மாதம் பயிற்சி முடித்த 3 மோப்ப நாய்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 3 மோப்ப நாய்களுக்கு 6 மாதங்களாக பயிற்சியானது அளிக்கப்பட்டது.

நிலா, டயானா என்று பெயரிடப்பட்ட இந்த இரு நாய்களுக்கும் வெடிகுண்டு கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்டெபி என்று பெயரிடப்பட்ட மோப்ப நாய் குற்றவாளிகளை கண்டறிவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த மூன்று நாய்களுக்கும் சிறப்பு பயிற்சி நிறைவு பெற்ற நிலையில், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறித்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

இதையடுத்து, ஆணையரின் உத்தரவின்படி நிலா, டயானா மற்றும் ஸ்டெபி நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...