கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தொற்றை கையாள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் கொரோனா தொற்றை கையாளும் ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முழு கவச உடை அணிந்து பங்கேற்றனர்.


கோவை: சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கும்படி மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுவது, சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கையாள வேண்டும், நவீன கருவிகள் கொண்டு எவ்வாறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும் என பயிற்சி மேற்கொண்டனர்.



இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் PPE suit எனப்படும் முழு கவச உடை அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோவை மாவட்டம் முழுவதும் 6,400 படுக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 3,537 பெட்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று தடுப்பூசியை பொறுத்தவரை கோவையில் முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 96 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசியை 14 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...