கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தொற்றை கையாள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் கொரோனா தொற்றை கையாளும் ஒத்திகை நிகழ்ச்சியில் மருத்துவர்கள் முழு கவச உடை அணிந்து பங்கேற்றனர்.


கோவை: சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவிலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்கும்படி மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கையாளுவது, சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு கையாள வேண்டும், நவீன கருவிகள் கொண்டு எவ்வாறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும் என பயிற்சி மேற்கொண்டனர்.



இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் PPE suit எனப்படும் முழு கவச உடை அணிந்து ஒத்திகையில் ஈடுபட்டனர். இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.



கோவை மாவட்டம் முழுவதும் 6,400 படுக்கை தயார் நிலையில் உள்ளது என்றும் இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 3,537 பெட்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று தடுப்பூசியை பொறுத்தவரை கோவையில் முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 96 சதவீதமும், பூஸ்டர் தடுப்பூசியை 14 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...