கோவையில் 8 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது தாத்தா போக்சோவில் கைது..!

கோவை கருமத்தம்பட்டி அருகே சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோமனூர் பகுதி சேர்ந்த 53 வயதான ஒருவர், அவரது 8 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருக்கும் பொழுது பாசமாக கொஞ்சுவது போல பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு முதியவர் செய்த பாலியல் சீண்டல் பின்னர் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குடும்பத்தினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரவணைத்து பாதுகாப்புடன் நடக்க வேண்டிய தாத்தாவே சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...