கோவை குருடம்பாளையத்தில் நடைபெற்ற கொ.ம.தே.க ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி ஆலோசனை கூட்டத்தில், கட்சியில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஊராட்சி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜீவானந்தம் மனோகரனுக்கு சொந்தமான ரோஜா தோட்டத்தில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் A.P.வரதராஜன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், கோவை மேற்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான K.S.குழந்தைவேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில், முக்கியமான 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) வரும் 2023 ஆம் ஆண்டில் கோவை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் நடைபெறும் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

2) கிளைகள் தோறும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

3) கிளைகளில் உள்ள உறுப்பினர்களின் இல்லத்திற்கு கட்சியின் காலண்டர்களை (Yearly calendar ) கொண்டு சேர்க்க வேண்டும்.

4) முக்கியமான கிராமப்புற அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குரல் கொடுக்க வேண்டும்.

5) "மறுமலர்ச்சி கொங்குநாடு" பத்திரிக்கையின் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும்.

6) தீரன் படை மற்றும் மகளிர் அணி அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இந்த கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தங்கவேல் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கீரணத்தம் தனுஷ்கோடி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா அருள்பிரகாஷ், மாவட்ட விவசாய அணி செயலாளர் மருதாசலம், ஒன்றிய துணைச் செயலாளர் பன்னிமடை பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் கணேசன், தங்கவேல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுன்சிலர் தீபன்குமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீதர் கீரணத்தம் ஊராட்சி கவுன்சிலர் பரமேஸ்வரன்,

மேலும், கிளை நிர்வாகிகள் சூர்யா, ராஜகோபால், P.பாபு, தாமோதரசாமி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஜெகதீஸ்வரி, காஞ்சனா சாவித்திரி, காயத்ரி பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி நகர செயலாளர் பாலு (எ) பாலகிருஷ்ணன், பன்னிமடை ஊராட்சி செயலாளர் சிவஞானம் மாவட்ட IT WING செயலாளர் கார்த்திகேயன் ஆறுக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன் மாவீரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...