கோவையில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு - இளைஞர் கைது….!

சிறுமுகை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற வசந்தகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (63). இவரது மனைவி சரோஜா (59). இருவரும் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களின் படங்களை போலீசார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் வசந்தகுமார் என்பதும் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வசந்தமாரை கைது செய்த போலீசார் அவர் கொள்ளை அடித்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...