சிக்கிமில் விபத்தில் உயிரிழந்த பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையம் வந்தடைந்தது

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் விமானம் மூலம் கோவை வந்த நிலையில், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்கு என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றது.

அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்றைய தினம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.



அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...