சிக்கிமில் விபத்தில் உயிரிழந்த பாலக்காட்டை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் கோவை விமான நிலையம் வந்தடைந்தது

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பாலக்காடு பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் வைசாக்கின் உடல் விமானம் மூலம் கோவை வந்த நிலையில், ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிக்கிம் மாநிலத்தில் உள்ள சாட்டன் என்ற இடத்திலிருந்து கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தங்கு என்ற இடத்தை நோக்கி ராணுவ வாகனம் ஒன்று வீரர்களுடன் சென்றது.

அப்போது வடக்கு பகுதியில் செமா என்ற இடத்தில் வளைவில் வாகனம் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் உடனே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தற்போது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் வைசாக் என்பவரும் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்றைய தினம் கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.



அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது.

அப்போது, அட்மினிஸ்ட்ரேடிவ் கமெண்ட் பிஜு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவரது உடல் அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...