கோவை 50, 51வது வார்டுகளில் ரூ.71.20 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 மற்றும் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.71.20 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.31.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கழிப்பிடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜை விழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து, 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம்‌ மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கழிப்பிடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பணியினை விரைவாக தரமாகவும்‌ செய்து முடித்து மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து 51வது வார்டுக்குட்பட்ட பாரதிபுரம்‌ பகுதியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 668 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்‌ சாலை அமைக்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.



இந்த நிகழ்ச்சியின்போது கல்விக்குழு தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கீதா சேரலாதன்‌, அம்சவேணி மணிகண்டன்‌, உதவி ஆணையர்‌ முத்து ராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தா்ராஜன்‌, உதவி பொறியாளர்கள்‌ சீனிவாசன்‌, கல்யாணசுந்தரம்‌, சுகாதார அலுவலா்‌ முருகா, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ மற்றும்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...