ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி டேன் டீ தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை டேன் டீ நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்றும், விருப்ப ஓய்வு பெற வலியுறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்கு உட்பட்ட சின்கோனாவில் லாசன் தேயிலைத் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில், இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வை தமிழக அரசு டான் டீ நிர்வாகம் தங்களுக்கு வழங்காமல் உள்ளது. நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் லசான் தோட்டத்தில் வால்பாறை டிவிஷன் முழுவதும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்களை விருப்ப பணி ஓய்வு பெறவும் வலியுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் விருப்ப பணி ஓய்வை எழுத்து மூலமாக டான் டீ நிர்வாகத்திடம் கொடுத்துள்ளது. தாங்கள் வெளியேற வேண்டும் என்றால் இழப்பீடு தொகையாக 25 லட்சம் மற்றும் 3 சென்ட் இடமும் அந்த இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பும் வேண்டும் என கேட்டிருந்தோம், ஆனால் டான் டீ நிர்வாகத்தினர் இது நாள் வரை தராமல் அலைக்கழிக்கிறது.

இதேசமயம் தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் டான் டீ நிர்வாகம் அடிப்படை தேவைகளை கூட பராமரிக்காமல் இருந்து வருகிறது.

மேலும் தேயிலைகள் மண்டி கிடப்பதால் முட்புதர்களாக மாறி வருவதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. டான் டீ நிர்வாகம் தேயிலை தோட்டங்களை சீர் செய்து போதுமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி பாதுகாப்பாக பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கை மனுவை கருணை மனுவாக ஏற்றுக் கொண்டு உடனடியாக டான் டீ தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...