ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி டேன் டீ தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வை டேன் டீ நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்றும், விருப்ப ஓய்வு பெற வலியுறுத்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்கு உட்பட்ட சின்கோனாவில் லாசன் தேயிலைத் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில், இந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகள் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு அறிவித்த சம்பள உயர்வை தமிழக அரசு டான் டீ நிர்வாகம் தங்களுக்கு வழங்காமல் உள்ளது. நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும்.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் லசான் தோட்டத்தில் வால்பாறை டிவிஷன் முழுவதும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளர்களை விருப்ப பணி ஓய்வு பெறவும் வலியுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் தொழிலாளர்கள் விருப்ப பணி ஓய்வை எழுத்து மூலமாக டான் டீ நிர்வாகத்திடம் கொடுத்துள்ளது. தாங்கள் வெளியேற வேண்டும் என்றால் இழப்பீடு தொகையாக 25 லட்சம் மற்றும் 3 சென்ட் இடமும் அந்த இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்பும் வேண்டும் என கேட்டிருந்தோம், ஆனால் டான் டீ நிர்வாகத்தினர் இது நாள் வரை தராமல் அலைக்கழிக்கிறது.

இதேசமயம் தற்போது வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் டான் டீ நிர்வாகம் அடிப்படை தேவைகளை கூட பராமரிக்காமல் இருந்து வருகிறது.

மேலும் தேயிலைகள் மண்டி கிடப்பதால் முட்புதர்களாக மாறி வருவதால், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. டான் டீ நிர்வாகம் தேயிலை தோட்டங்களை சீர் செய்து போதுமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி பாதுகாப்பாக பணி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கை மனுவை கருணை மனுவாக ஏற்றுக் கொண்டு உடனடியாக டான் டீ தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...