கோவை வேடப்பட்டி அருகே கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - பரபரப்பு..!

வேடபட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் குளக்கரையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலையா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த வேடப்பட்டி அருகே சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகேயுள்ள குளக்கரையில், இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார், நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் இடிக்கி மறையூரை சேர்ந்த துரைராஜ் மகன் விஷ்ணு (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பீளமேடு பகுதியில் தங்கி சி.என்.சி இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 11 மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் காதலிக்க வற்புறுத்தி வந்த விஷ்னு, நேற்று வேடப்பட்டியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கடைக்கு தீவைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஷ்னு தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விஷ்ணு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...