கோவை வேடப்பட்டி அருகே கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு - பரபரப்பு..!

வேடபட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் குளக்கரையில் கேரளாவை சேர்ந்த இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலையா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த வேடப்பட்டி அருகே சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகேயுள்ள குளக்கரையில், இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார், நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் இடிக்கி மறையூரை சேர்ந்த துரைராஜ் மகன் விஷ்ணு (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பீளமேடு பகுதியில் தங்கி சி.என்.சி இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், அவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த 11 மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் காதலிக்க வற்புறுத்தி வந்த விஷ்னு, நேற்று வேடப்பட்டியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கடைக்கு தீவைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஷ்னு தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக விஷ்ணு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் குளக்கரையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...