தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம்

காலாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது குறைவாக காணப்பட்டாலும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.



இதனால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தற்போது குளிர் காலம் என்பதால் பூங்காவில் மலர்கள் இல்லாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையில் பூங்காவை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



இதே போல ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...