தொடர் விடுமுறையால் உதகைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை கண்டு ரசிக்க ஆர்வம்

காலாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் என தொடர் விடுமுறை காரணமாக உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகையால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை என்பது குறைவாக காணப்பட்டாலும் தொடர் விடுமுறை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரத்து காணப்படும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.



இதனால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் உதகைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.



அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் இன்று காலை முதலே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தற்போது குளிர் காலம் என்பதால் பூங்காவில் மலர்கள் இல்லாவிட்டாலும் குளிர்ச்சியான காலநிலையில் பூங்காவை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



இதே போல ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...