கோவை ராம்நகர் மண்டல் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக ராம் நகர் மண்டல் பகுதியில் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான சிவசங்கரி கலந்து கொண்டார்.



இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...