கோவை ராம்நகர் மண்டல் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக ராம் நகர் மண்டல் பகுதியில் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான சிவசங்கரி கலந்து கொண்டார்.



இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...