கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அடுத்த கருஞ்சாமிகவுண்டபாளையம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள கருஞ்சாமிகவுண்ட பாளையம் கிராமத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், கிளை தலைவர் குமார் கொடியேற்றினார்.



இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்டத்துணை தலைவர் அப்பு(எ) கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் PT மோகன்ராஜ், மாவட்ட விவசாயி துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஸ் (எ) பாலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Newsletter

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...